கலைஞனின் கைவண்ணம்
பழுக்கச்செய்து பந்திவிரிக்கும்
பழக்காரனைவிட ...
பறித்துத்தரும் விவசாயி வசம் இருக்கிறது....
கலைஞனின் கைவண்ணம்
அக அழகை மட்டுமே
அணு அணுவாய் ஆராதிக்கும்
" அம்மா" வின் மனதில் இருக்கிறது......
கலைஞனின் கைவண்ணம்.
எது புருவம் உயர்த்தச் செய்ததோ
இதழ் கடையில் புன்னகை தந்ததோ
விழியோரம் பனிநீர் துளிர்க்கச் செய்ததோ
அங்கு நீ கண்டதுதான்
கலைஞனின் கைவண்ணம்
No comments:
Post a Comment